| வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், |
| மிக நல்ல வீணை தடவி, |
| மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம், வெள்ளி, |
| சனி, பாம்புஇரண்டும், உடனே |
| ஆசு அறும்; நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, |
| எருது ஏறி, ஏழைஉடனே, |
| பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், |
| உடன்ஆய நாள்கள்அவைதாம், |
| அன்பொடு நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து, |
| உமையோடும், வெள்ளைவிடைமேல், |
| முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| திருமகள், கலைஅதுஊர்தி, செயமாது, பூமி, |
| திசைதெய்வம்ஆனபலவும், |
| அரு நெதி நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| மதிநுதல் மங்கையோடு, வடபால் இருந்து |
| மறை ஓதும் எங்கள் பரமன், |
| நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| கொதிஉறு காலன், அங்கி, நமனோடு தூதர், |
| கொடுநோய்கள்ஆனபலவும், |
| அதிகுணம் நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள்தனோடும் |
| விடை ஏறும் நங்கள் பரமன், |
| துஞ்சு இருள்---வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து---என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| வெஞ்சின அவுணரோடும், உரும்-இடியும், மின்னும், |
| மிகைஆன பூதம்அவையும், |
| அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| வாள்வரிஅதள்அது ஆடை வரி கோவணத்தர் |
| மடவாள்தனோடும் உடன்ஆய், |
| நாள்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல், |
| கொடு நாகமோடு, கரடி, |
| ஆள் அரி, நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| செப்புஇளமுலை நல் மங்கை ஒருபாகம்ஆக |
| விடை ஏறு செல்வன், அடைவு ஆர் |
| ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| வெப்பொடு, குளிரும், வாதம், மிகைஆன பித்தும், |
| வினைஆன, வந்து நலியா; |
| அப்படி நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| வேள் பட விழிசெய்து, அன்று, விடைமேல் இருந்து, |
| மடவாள்தனோடும் உடன்ஆய், |
| வாள்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்தனோடும் |
| இடர்ஆன வந்து நலியா; |
| ஆழ் கடல் நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| பலபலவேடம் ஆகும் பரன், நாரிபாகன், |
| பசு ஏறும் எங்கள் பரமன், |
| சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் |
| வரு காலம்ஆனபலவும், |
| அலைகடல், மேரு, நல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு |
| குணம்ஆய வேட விகிர்தன், |
| மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என் |
| உளமே புகுந்தஅதனால்--- |
| புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் |
| திருநீறு செம்மை திடமே; |
| அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, |
| அடியார்அவர்க்கு மிகவே. |
|
| தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி, |
| வளர் செம்பொன் எங்கும் நிகழ, |
| நான்முகன் ஆதிஆய பிரமாபுரத்து |
| மறைஞான ஞானமுனிவன், |
| தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து |
| நலியாத வண்ணம் உரைசெய் |
| ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள், வானில் |
| அரசு ஆள்வர்; ஆணை நமதே. |
No comments:
Post a Comment