திருச்சிற்றம்பலம் |
| துணிவளர் திங்கள் துளங்கி விளங்க |
| சுடர்ச்சுடை சுற்றி முடித்து, |
| பணிவளர் கொள்கையர் பாரிடம் சூழ, |
| ஆரிடமும் பலி தேர்வர்; |
| அணிவளர் கோலம் எலாம் செய்து, |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| மணிவளர் கண்டரோ, மங்கையை வாட |
| மயல் செய்வதோ, இவர்மாண்பே |
| கலைபுனை மானஉரி தோல்உடை ஆடை, |
| கனல் சுடரால் இவர்கண்கள், |
| தலைஅணி சென்னியர், தார்அணி மார்பர், |
| தம்அடிகள் இவர் என்ன |
| அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்து அமர் |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| இலைபுனை வேலரோ, ஏழையை வாட, |
| இடர்செய்வதோ, இவர் ஈடே |
| வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சுஇருள்; |
| மாலை வேண்டுவர், பூண்பது வெண்நூல்; |
| நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு |
| இடமாக நண்ணுவர், நம்மை நயந்து |
| மஞ்ச அடைமாளிகை, சூழ்தரு |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி |
| வாடச் சிதை செய்வதோ இவர் சீரே |
| கன மலர்க் கொன்றை அலங்கல் |
| இலங்க கனல்தரு தூமதிக் கண்ணி |
| புனமலர் மாலை அணிந்து, அழகு |
| ஆய புனிதர் கொல்ஆம், இவர் என்ன, |
| அனம் மலி வண்பொழில் சூழ்தரு |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| மனம் மலி மைந்தரோ மங்கையை |
| வாட மயல் செய்வதோ, இவர் மாண்பே |
| மாந்தர்தம் பால் நறுநெய் மகிழ்ந்து |
| ஆடி வளர் சடைமேல் புனல்வைத்து |
| மோந்தை, முழா, குழல், தாளம் ஓர் |
| வீணை முதிர ஓர் வாய்மூரி பாடி, |
| ஆந்தை விழிச் சிறு பூதத்தர், |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் |
| சதுர் செய்வதோ, இவர் சார்வே |
| நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, |
| நெற்றிக் கண்ணால் உற்றுநோக்கி |
| ஆறு அது சூடி, ஆடு அரவு ஆட்டி, |
| ஐவிரல் கோவண ஆடை |
| பால்தரு மேனியர், பூதத்தர், |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| ஏறுஅது ஏறியர், ஏழையை வாட, |
| இடர் செய்வதோ இவர்ஈடே |
| பொங்கு இள நாகம், ஏர் ஏகவடத்தோடு |
| ஆமை வெண்நூல், புனைகொன்றை |
| கொங்கு இள மாலை புனைந்து அழகு ஆய, |
| குழகர் கொல் ஆம், இவர் என்ன |
| அங்கு இள மங்கை ஓர் பங்கினர்; |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| சங்குஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் |
| சதிர் செய்வதோ இவர்சார்வே |
| ஏவலத்தால் விசயற்கு அருள் செய்து, |
| இராவணன் தன்னை ஈடு அழித்து, |
| மூவரிலும் முதல் ஆய், நடு ஆய |
| மூர்த்தியை அன்றி மொழியாள்; |
| யாவர்களும் பரவும் தொழில் |
| பாச்சலாச்சிராமத்து உறைகின்ற |
| தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் |
| சிதை செய்வதோ, இவர் சேர்வே |
| மேலது நான்முகன் எய்தியது இல்லை; |
| கீழது சேவடி தன்னை |
| நீலது வண்ணனும் எய்தியது இல்லை; |
| என இவர் நின்றதும் அல்லால் |
| ஆல்அது மாமதி தோய்பொழில் |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| பால்அது வண்ணரோ பைந்தொடி வாடப் |
| பழிசெய்வதோ, இவர் பண்பே |
| நாணொடு கூடிய சாயினரோனும் நகுவர், |
| அவர் இருபோதும்; |
| ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் |
| அவை கொள வேண்டா; |
| ஆணோடு பெண்வடிவு ஆயினர், |
| பாச்சிலாச் சிராமத்து உறைகின்ற |
| பூண்நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் |
| புனை செய்வதோ, இவர் பொற்பே |
| அகம்மலி அன்போடு தொண்டர் வணங்க, |
| ஆச்சிராமத்து உறைகின்ற |
| புகைமலி மாலை புனைந்த, அழகு ஆய |
| புனிதர் கொல் ஆம் இவர் என்ன, |
| நகைமலி தண் பொழில் சூழ்தரு |
| காழி நற்றமிழ் ஞானசம்பந்தன் |
| தகைமலி தண்தமிழ் கொண்டு இவை |
| ஏத்த, சாரகிலா வினைதானே. |
திருச்சிற்றம்பலம் |
No comments:
Post a Comment